Friday, November 23, 2007

!! சுமை தாங்காது !!

இனியவள்

ஓவியம் வரைவது போல்
வரைந்து சென்றுவிட்டாய்
காதலை என் இதயத்தில்...!

வர்ணங்கள் பல சேர்த்திட்டேன்
என்னுயிர் கொண்டு - காகிதமென
கிழித்துச் சென்றுவிட்டாயே
கண்மூடி கண்திறப்பதற்கிடையில்...!

கண்ணாடியாய் உடைந்திட்ட
இதயத்தின் இரத்தத் துளிகளின்
சுமை தாங்காது துடிதுடித்துக்
கொண்டிருக்கிறதே 
என் உயிர்...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.