Tuesday, November 20, 2007

!! வாழ வேண்டும் !!

இனியவள்


காதலெனும் அரியாணையில்

ஆட்சி செய்யும் ராஜா நீ

உன்னை ஆளும் 

ராணி நான்...!


பூமித் தாயை அர்ச்சிகின்றன

பூக்கள் கொண்டு மரங்கள்

உன்னை நான் பூசிக்கின்றேன்

என் அன்பு கொண்டு..!


குழந்தை போல் தவழ்ந்து

செல்லும் தென்றல் இதமாய்

உன்னைத் தழுவிச்செல்ல

உன் கேசம் தவழ்ந்து

விளையாடுகின்றது உன்

நெற்றிப் பொட்டில்..!


நீ கடலைகளில் கால் நனைக்க

நான் நனைந்து கொண்டேன்

உன் அன்பு மழையில்...!


செல்லமாய் கோபம் கொல்லும்

உன் கண்கள் எதோ செய்தியை

எனக்கு சொல்லிச் செல்ல

அதனை என் விழிகள்

கவ்விக் கொள்கின்றன

இரையை கவ்வும் மீன் போல்...!


ஏழு ஜென்மங்கள்

வேண்டாம் எனக்கு

வாழ வேண்டும் 

இந்தப் பிறப்பில்

உன்னுடன் ஏழேழு 

ஜென்மத்துக்கும்

சேர்த்து...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.