Thursday, November 15, 2007

ஆயுள் முடிவு..!



முதல் கனவு நீ
முதல் கண் நீ
முதல் வெட்கம் நீ
முதல் உணர்வு நீ
முதல் காமம் நீ - என்
வாழ்க்கையின் முதல் காதல் நீ
அதுவே என் இறுதி
காதலும்..! 

ஆயுள் முடிவு வரை
உன் நினைவு என்
மனதை விட்டு நீங்காது - என் 
முதல் கனவும் நீ 
முடிவில்லா கனவும் நீ 
நான் இறந்தாலும்
என் ஆயுளும் சேர்த்து
உனக்கே கிடைக்க
இறைவனிடம்
பிரார்த்திப்பேன்
என் அன்பே..!!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.