Monday, November 19, 2007

ஒரு தடவை..!

இனியவள்

மரணத்தை அணைக்கின்றாய்

தவழ்ந்து வரும் குழந்தையை

அணைப்பது போல்...!


இல்லாத உலகத்திற்கு போக

தவம் கிடக்கின்றாய்

இருக்கும் உலகை விட்டு...!


பிறப்பும் இறப்பும் 

ஒரு தடவையே

பிறந்த பயனை 

முழுமையாய் அடையாமல்

குறைப் பிரவசமாய் போகத்

துடிக்கின்றாயே தோழி...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.