Sunday, November 25, 2007

இதற்கு பெயர் தான் காதலா..!



இரு மின்னல்களும்
ஒன்றையொன்று 
உரசும் போது ஏற்படும் 
ஒளி போன்று
அவன் கண்கள் 
என் கண்ணோடு
உரசும் போது 
என் இதயத்தில்
ஒளிக்கீற்று...!

இதயத் துடிப்பு 
முன்பைவிட
வேகமாக துடிக்கின்றதே..,
அவனின் அழகிய 
குறும்பை கடைக்கண் 
கொண்டு நோக்கையிலே
சூரியனோடு வெண்ணிலா
காதல் கொண்டதோ....!

கண்கட்டி வித்தை காட்டி
என்னுள் நுழைந்து 
கொண்டாயே..,
கரம் கொண்டு தடுத்திட
முயற்சித்தேன் 
காற்றாய் மாறி
விரல்களுக்கிடையில் 
தவழுகின்றாய்..!

காற்றுக்கள் அனைத்தும்
உன்  பெயரை 
சுமந்து வந்து
ரீங்காரம் 
இடுகின்றது - என் 
காதினிலே..!

கோயில் கற்பக்கிரகத்தில்
இறைவனுக்கு பதில்
உன் முகம்..,
பாதத்தை 
மெதுவாய்
அடிவைத்து 
நடக்கின்றேன்
தரையில் காணும் 
மணல் துகல்களில்
உன் முகம்..,
இதற்கு பெயர் தான் 
காதலோ..!

காணும் அனைத்திலும்
உன் முகம்
கேட்கும் குரலனைத்தும்
உன் குரல்..,
ஒவ்வொரு நிமிடமும்
உன் பெயரையே 
வேதம் போல்
உச்சரிக்கும்
பேதையிவள்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.