Thursday, November 15, 2007

!! அழைக்கின்றேன் !!

இனியவள்

சுழன்று கொண்டிருக்கின்றது
சூரியனைச் சுற்றும் 
பூமி போல்..!

உன் கண்களிரண்டும் கவிபாட
கரங்களிரண்டும் இசை மீட்ட
உன் தேன்குரல் சிந்துகின்றது
அழகிய பாடலை..!

தேன் இருக்கும் பூவை நோக்கி
படையெடுக்கும் வண்டுகள் போல்
அன்பிருக்கும் உன்னை நோக்கி
படையெடுக்கின்றன என்
ஜம்புலங்களும்..!

இயற்கையால் உன்னை 
நேசித்து இயற்கையை 
மாற்றுகின்றேன்
உனக்காக..!

இரவை பகலாக்கி 
பகலை இரவாக்கி
சூரியனை நிலவாக்கி 
வெண்ணிலாவை
சூரியன் ஆக்குகின்றேன்
உனக்காக..!

என் கால்தடங்கள் உன்
பெயரைவிட்டுச் செல்ல
என் மூச்சுக் காற்று அவற்றை
சேகரித்து அனுப்புகின்றன
என் செல்களுக்கு..!

காதல் கொண்டேன் நான்
காதல் கொண்டேன் - உன்
அன்பின் மேல் நான்
காதல் கொண்டேன்..!

கண்கள் இழந்தேன் நான்
கண்கள் இழந்தேன் - உன்
கண்கள் கண்டு நான்
கண்கள் இழந்தேன்..!

இதயத்தை இடமாற்றிக் 
கொண்டேன் - நான் 
இடமாற்றிக் கொண்டேன்- உன்
இதயத்தை எனக்குள்
இடம் மாற்றிக் கொண்டேன்..!

துணைக்கு அழைக்கின்றேன் 
நான் துணைக்கு அழைக்கின்றேன்
உன் நினைவுகளை 
நான் துணைக்கு
அழைக்கின்றேன்
என் வாழ்க்கைப் பந்து
உன்னைச் சுற்றியே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.