Tuesday, November 20, 2007

திசைகள் இன்றி..!

இனியவள்

நீ எனக்கு 
தந்து விட்டுச்சென்ற
நினைவுகளை 
வடிகளாக்கி
வடிக்கின்றேன் 
கவிதை...!

உன் முகம் மறந்து 
நினைவுகளை நான் 
மறக்க முயற்சிக்கையில்
காற்றில் பறக்கும் சருகாய்
உன் நினைவுகள் 
வட்டமிடுகின்றன
பருந்தாய்....!

குயிலாய் பாடித் 
திரிந்து பறந்தேன் - என் 
குரலை எனக்கு தெரியாமல்
களவாடிச் சென்று 
என் சிறகை உடைத்து 
விட்டாயே...!

உயிருள்ள சிலையின் 
உயிரை கவர்ந்து 
சென்று உயிரற்றதாய்
மாற்றி விட்டாய்....!
நீ திரும்பும் திசையெல்லாம்
திரும்பினேன் சூரியனைக் 
கண்ட தாமரையாய்
திசைகளின்றி பயணிக்க 
விட்டு விட்டாயே
என் வாழ்க்கைப் 
பயணத்தை....!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.