Friday, November 9, 2007

கண்ணீர் எழுதும் காவியம்

இனியவள்

கண்ணீர் எழுதும் காவியமிது

நிஜத்தில் நிழலாய்ப் போனவனை

நினைத்து துடிக்குது மனது..,

மனதில் உறைந்து விட்டவன்

நினைவுகளை நிஜங்கள் கழட்டிவிட

முனைகின்றன தண்ணீரை வெட்ட

முனையும் கத்திகள் போல்...!


கரங்கள் கொண்டு வரைந்த

ஓவியத்தை கரங்களே

அழிப்பதைப் போல் அன்பு கொண்டு

வரைந்த அவன் உருவத்தை

உயிர் கொண்டுஅழிக்க முயன்று

தோற்றுப் போகின்றேன் - அவன்

பின்னே உயிர் சென்றதனை

மறந்து...!


நினைவுகள் இனிமை - காதல்

கரங்களை விடுவித்து - திருமணம்

என்னும் வசந்த காலத்தில்

பயணிப்பவர்களுக்கு...!


பிரிவு நினைவைப் பரிசளிக்க

துன்பம் என்னும் சிலுவை சுமந்து

நரகம் என்னும் வாழ்க்கை

வட்டத்தில் பயணிக்கின்றேன்...!


இறந்து போனது என் வசந்த காலம்

கடந்து போன இறந்த காலத்தில்...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.