Thursday, November 15, 2007

!! சுகமான சுமை !!





மனதில் உன்னைச்
சுமக்கின்றேன் 
தாயாய்..!

இதயத்தில் உன்னைச்
சுமக்கின்றேன் 
காதலியாய்..!

வாழ்வில் உன்னைச்
சுமக்கின்றேன் 
மனைவியாய்...!

என் ஆயுள் முழுவதும்
நான் ஒரு சுமைதாங்கியே
உனக்கு..!

தாங்கும் சுமைகளனைத்தும்
உன்னுடையவை என்பதால்
பாரமாய் இருப்பதிற்கு பதில்
இலவம்பஞ்சாய் இன்னும்
சுமக்கக் கேட்கின்றது..!

என்றும் நீ சுகமான
சுமை எனக்கு..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.