மனதில் உன்னைச்
சுமக்கின்றேன்
தாயாய்..!
இதயத்தில் உன்னைச்
சுமக்கின்றேன்
காதலியாய்..!
வாழ்வில் உன்னைச்
சுமக்கின்றேன்
மனைவியாய்...!
என் ஆயுள் முழுவதும்
நான் ஒரு சுமைதாங்கியே
உனக்கு..!
தாங்கும் சுமைகளனைத்தும்
உன்னுடையவை என்பதால்
பாரமாய் இருப்பதிற்கு பதில்
இலவம்பஞ்சாய் இன்னும்
சுமக்கக் கேட்கின்றது..!
என்றும் நீ சுகமான
சுமை எனக்கு..!
No comments:
Post a Comment