Friday, November 9, 2007

தாங்காது இதயம்

இனியவள்

இன்பங்கள் பரிமாறிக் 
கொண்டோம்
துன்பங்கள் இடமாற்றிக் 
கொண்டோம்
இடையில் இறங்கிக் 
கொள்வதற்கு
நட்பொன்றும் இரயில் 
பயணமல்லவே..,
உயிர் உள்ளவரை 
எம்மோடு
தொடர்ந்து வரும் 
உயிர்ப் பயணமல்லவா...!

காரணங்கள் பல கூறி - உன்
உயிர்க் கூட்டில் இருந்தவளை
இடம்மாற்றி உயிரற்ற கூடாக
மாற்றிவிடாதே...!

பிரிந்த பிரிவை நினைத்து
வருந்தியவளை உன் நட்பெனும்
உறவு தந்து மறுஜென்மம் 
கொடுத்தவனே - அவளுக்கு 
பிரிவென்னும் பரிசை
அளித்துச் சென்றுவிடாதே...!

இன்னோர் பிரிவை 
தாங்கும் வல்லமை 
அவள் இதயத்திற்கு இல்லை...!

இதயத்தில் ஆரம்பித்த
அவளின் பயணம் 
உயிர் என்னும் வீதியூடாக 
பயணித்துக் 
கொண்டிருக்கின்றது..!

பிரிவு என்னும் காலனை அனுப்பி
பயணிக்கும் பாதயை 
மூடிவிடாதே..,
மூடி விடும் அவள் கண்கள் 
பிரிவைக் கண்கொண்டு 
பார்க்கும் முன்...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.