Wednesday, November 21, 2007

!! நிலவாய்... !!

இனியவள்

மின்னலடித்திடும் உன்
பார்வையில் மழையாய்
பொழிகிறதே அன்பு வெள்ளம்
என்னுள்...!

இடியென உரத்துச் 
சிரித்திடும் - உன் 
செல்லச் சிரிப்பில்
கனியென கனிந்திடுமே
என்னிதயம்..!

சூறாவளியாய் என் 
இதயத்தில் நுழைந்து 
வெளிச்சப் புள்ளியாய்
நட்சத்திரமென மின்னி
நிலவாய் குளிர்விக்கிறாய்
என்னை...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.