மின்னலடித்திடும் உன்
பார்வையில் மழையாய்
பொழிகிறதே அன்பு வெள்ளம்
என்னுள்...!
இடியென உரத்துச்
சிரித்திடும் - உன்
செல்லச் சிரிப்பில்
கனியென கனிந்திடுமே
என்னிதயம்..!
சூறாவளியாய் என்
இதயத்தில் நுழைந்து
வெளிச்சப் புள்ளியாய்
நட்சத்திரமென மின்னி
நிலவாய் குளிர்விக்கிறாய்
என்னை...!
No comments:
Post a Comment