!! ஆலவேர் !!
நீ என்னைப் பிரிந்த போது
கூட மறந்து சென்று விட்டாய்
உன் நினைவுகளையும்
உன்னோடு அழைத்துச்
செல்வதற்கு..!
யார் சொன்னது எம் காதல்
தோற்றுவிட்டதென இன்றும்
ஆலமரமாய் வளர்ந்து
கொண்டு தான் இருக்கின்றது
உன் நினைவு என்னும்
உரம் கொண்டு..!
இணைந்த காதல் வெற்றி
பெறுவதுமில்லை
பிரிந்த காதல்
தோற்பதுமில்லை...!
No comments:
Post a Comment