Saturday, November 24, 2007

வலிக்குதடி..!


உன் கரத்தினிலே
நான் கண்ட காயம்
என் உயிரினிலே
வலிக்குதடி..!

காதல் செய்
உண்மைக் காதல்
என்றோ ஒருநாள்
உனை தேடி வரும்
உன் காதல் ஒன்றும் 
பொய்யுமில்லை
அருகில் இருந்து
கண்கொண்டு பார்த்தவள்
நான்..!

உன் உண்மைக் காதல்
அவனுக்கோ ஒரு
விளையாட்டு பொம்மை
நீயோ தவிக்கின்றாய்
அவனோ சற்றுமே
உன் நினைவே 
இல்லாமல் இருக்கையில்
நீ மட்டும் ஏனடி
உனையே நீ
காயப்படுத்தினாய்
என் நெஞ்சம் 
வலிக்குதடி..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.