என் குருதிக்குள் அணுவாய்
கலந்திருப்பவனே
உன் விழிகளை - நான்
ஆட்சி செய்வது
அறியாமல்..!
உன்னை நான்
தேடித் தேடி அலைகின்றேன்
சூரியனைத் தேடும்
தாமரையாய்..,
காதல் என்னும்
பூங்காவனத்திற்கு
அழைத்து வந்த
தேவதூதன் நீ
என்றும் ஜீவன்
எனக்கு நீ..!
காற்றில் தவழ்ந்து
கடலில் மிதந்து
காதல் என்னும்
தேசம் தேடி
போகின்றேன்
உடலாய் இருக்கும்
உன்னிடம் உயிராய்
வந்து கலந்திட...!
அன்னையின்
அன்பில் உலகை
மறந்திருந்த நான்
உன் அன்பில்
அன்னையையே மறந்து
காதல் என்னும் பூவில்
அன்பென்னும் தேன்
அருந்துகின்றேன்...!
வானத்தின் உச்சியில்
மிதக்கின்றேன் உன்னால்
என் காதல் உனக்கு
புரியாவிடில்
விழுந்திடுவேன்
சிறகொடிந்த
பறவையாய்..!
No comments:
Post a Comment