Monday, November 19, 2007

அது ஏனடா....???

இனியவள்

அழகான அந்த 

நாட்களில் அன்பாகப் 

பேசிய வார்த்தைகள்

அமுதாக இருந்ததே

எனக்கு இன்று

அதே வார்த்தைகள் 

விஷமாகத் தெரிகிறதே

அது ஏனடா...!!


அன்று முற்களைக் 

கூட பூவாய் மாற்றிய 

உன் காதல்

இன்று பூவை முற்களாய் 

மாற்றுகின்றதே

அது ஏனடா....!!


இதற்கெல்லாம்

காரணம் - நான்

உன்னைப்

பிரிந்ததாலா - இல்லை

இன்னொரு பெண் 

உனக்கு

காதலியானதாலா....!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.