காதலாக வந்த
கவிதை
காற்றாய்
கலைந்தது..!
என் உயிரோடு
இருக்கும் ஓசை
உன் பெயரை
இசையமைக்கின்றது..!
அன்பே நீ என்
காதலனாக வரும்
ஆசையதுவே என்
சுவாசமாய்
மாறியது...!
உன் இதயத்திற்கு
சொல் - என்னுயிர்
உன்னோடு தான்
இருக்கிறதென்று..!
ஒரு தலையாக
காதலிக்கும் எனை
ஒருமுறையாவது
புரிந்து கொள்வாயா..,
எனையும் - என்
காதலையும்..!
காத்திருந்த காதல்
கனவாகி விடுமா?
நினைத்துப் பார்க்கின்ற
நினைவுகள்
சுகமாகி விடுமா..!
உன் பிறந்த நாளில்
வாழ்த்துடன் கூடவே - என்
காதலையும் தெரியப்படுத்த
விரும்பினாலும் அதுவும்
கடந்த வருடங்களை
போன்று மௌனமாகவே
கலைந்தது..!
இதுவரை எனக்கும்
உனக்கும் சொல்லாத
அந்த மெளன உணர்வுகளை
இப்பொழுதாவது
சொல்லி விட்டுப் போ....!
No comments:
Post a Comment