Friday, November 9, 2007

!! சொல்லி விட்டுப் போ அன்பே !!

இனியவள்
காதலாக வந்த 
கவிதை
காற்றாய் 
கலைந்தது..!

என் உயிரோடு 
இருக்கும் ஓசை 
உன் பெயரை
இசையமைக்கின்றது..!

அன்பே நீ என் 
காதலனாக வரும்
ஆசையதுவே என் 
சுவாசமாய்
மாறியது...!

உன் இதயத்திற்கு 
சொல் - என்னுயிர் 
உன்னோடு தான்
இருக்கிறதென்று..!

ஒரு தலையாக
காதலிக்கும் எனை
ஒருமுறையாவது
புரிந்து கொள்வாயா..,
எனையும்  - என்
காதலையும்..!

காத்திருந்த காதல் 
கனவாகி விடுமா?
நினைத்துப் பார்க்கின்ற 
நினைவுகள்
சுகமாகி விடுமா..!

உன் பிறந்த நாளில்
வாழ்த்துடன் கூடவே - என் 
காதலையும் தெரியப்படுத்த 
விரும்பினாலும் அதுவும்
கடந்த வருடங்களை
போன்று மௌனமாகவே
கலைந்தது..!


இதுவரை எனக்கும் 
உனக்கும் சொல்லாத 
அந்த மெளன உணர்வுகளை
இப்பொழுதாவது 
சொல்லி விட்டுப் போ....!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.