Monday, November 19, 2007

வாழ்க்கைப் பாடம்

இனியவள்

ஆறடி மண்ணுக்குள் போவதற்கு
துடிக்கின்றாயே உன்னை
துடி துடிக்க விட்டுச்
சென்றவனை நினைத்து....

ஒரு கணம் நில் பெண்ணே
உன் வாழ்க்கை - காதல்
என்னும் சக்கரத்தை மட்டும்
சுற்றி அமைக்கப் படவில்லையே....

பரந்து விரிந்து கிடக்கும்
பூமியெங்கும் இயற்கை
விரிந்து காட்சியளிக்கின்றது
மத்தளம் போல்....

மரம் பூவையிழந்து கனியைத்
தருகின்றது....

வானம் முகிலை இழந்து
மழையத் தருகின்றது....

விறகு தன்னை எரித்து
எமக்கு ஒளி தருகின்றது...

கற்கள் பல அடிகள் தாங்கி
அழகிய சிற்பமாய்
உருவெடுக்கின்றது....

ஒன்றில் இருந்து இன்னொன்றாக
உருவெடுக்கின்றது இயற்கை...

நீ மட்டும் ஏன் இழந்ததை நினைத்து
உன்னை இழக்கின்றாய்..

வாங்கும் வலிகளையும்
அடிகள் அனைத்தையும்
வாழ்க்கையின் பாடமாய்
ஏற்று உன்னை நீ மேம்படுத்து
அனைத்தும் உன் நன்மைக்கே
என நினை தோல்விகள் கூட
வெற்றிக்கனியாய் தித்திக்கும்.....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.