
ஆறடி மண்ணுக்குள் போவதற்கு
துடிக்கின்றாயே உன்னை
துடி துடிக்க விட்டுச்
சென்றவனை நினைத்து....
ஒரு கணம் நில் பெண்ணே
உன் வாழ்க்கை - காதல்
என்னும் சக்கரத்தை மட்டும்
சுற்றி அமைக்கப் படவில்லையே....
பரந்து விரிந்து கிடக்கும்
பூமியெங்கும் இயற்கை
விரிந்து காட்சியளிக்கின்றது
மத்தளம் போல்....
மரம் பூவையிழந்து கனியைத்
தருகின்றது....
வானம் முகிலை இழந்து
மழையத் தருகின்றது....
விறகு தன்னை எரித்து
எமக்கு ஒளி தருகின்றது...
கற்கள் பல அடிகள் தாங்கி
அழகிய சிற்பமாய்
உருவெடுக்கின்றது....
ஒன்றில் இருந்து இன்னொன்றாக
உருவெடுக்கின்றது இயற்கை...
நீ மட்டும் ஏன் இழந்ததை நினைத்து
உன்னை இழக்கின்றாய்..
வாங்கும் வலிகளையும்
அடிகள் அனைத்தையும்
வாழ்க்கையின் பாடமாய்
ஏற்று உன்னை நீ மேம்படுத்து
அனைத்தும் உன் நன்மைக்கே
என நினை தோல்விகள் கூட
வெற்றிக்கனியாய் தித்திக்கும்.....
No comments:
Post a Comment