Monday, November 19, 2007

உன் முகம்..!



உன் தங்கையின்
நீராட்டு விழா சடங்கிலே 
நான் உன்னை 
அதிகம் விரும்ப 
ஆரம்பித்தேன்..! 

அன்று உன் வீட்டில் உன் பாத
செருப்பருகே - என்
பாத செருப்பினை 
கண்டதும் மனதில்
ஒரு பூரிப்பு
நீயே என் அருகில்
இருப்பது போன்று..! 

என் அறையில் 
இருந்தாலும் ஜன்னல் 
வழியேதேடுவது - உன்
முகம் ஒன்றே..! 

இன்று அந்த
முகத்தை நான்
என் மனக் கதவின்
வழியே பார்க்கிறேன்
ஆனாலும் நீ எனக்கு 
சொந்தமில்லை - இதை 
நினைக்கையில் என் உயிர்
வலிக்குதடா..!! 

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.