உன் தங்கையின்
நீராட்டு விழா சடங்கிலே
நான் உன்னை
அதிகம் விரும்ப
ஆரம்பித்தேன்..!
அன்று உன் வீட்டில் உன் பாத
செருப்பருகே - என்
பாத செருப்பினை
கண்டதும் மனதில்
ஒரு பூரிப்பு
நீயே என் அருகில்
இருப்பது போன்று..!
என் அறையில்
இருந்தாலும் ஜன்னல்
வழியேதேடுவது - உன்
முகம் ஒன்றே..!
இன்று அந்த
முகத்தை நான்
என் மனக் கதவின்
வழியே பார்க்கிறேன்
ஆனாலும் நீ எனக்கு
சொந்தமில்லை - இதை
நினைக்கையில் என் உயிர்
வலிக்குதடா..!!
No comments:
Post a Comment