Sunday, November 18, 2007

!! ரசிகை நான் !!

இனியவள்

உயிரற்ற உருவங்கள் 
அனைத்தும் உயிர் பெறும் 
ஓவியனின் கை 
வண்ணத்திலே...!

துலங்கா பொருள் 
அனைத்தும் ஒளிவீசிடும் 
சிற்பியின் கை 
வண்ணத்திலே..!

இயற்கை அனைத்தும்
கவி பாடிடும் 
கவிஞனின்
கவியிலே..!

உன்னால் உருப்பெற்ற
கவி நான் உன்னைத் தவிர
வேறு யாரும் படித்திட
அனுமதியேன்..!

உன்னால் உருப்பெற்ற
அழகிய சிற்பம் நான்
உன்னைத் தவிர என்னை
மென்மேலும் செதுக்க
வேறு யாரையும் 
அனுமதியேன்..!

உன்னால் உருப்பெற்ற
ஓவியம் நான் 
உன்னைத் தவிர
வேறு யாரும் 
கண் கொண்டு
பார்த்திட 
அனுமதியேன்..!

கலைஞனே உன்னை 
கட்டிப் போட 
முனைகின்றேன் 
என்னைத் தவிர வேறு 
கலைகள் படைத்திடாது
என்னைத் தவிர 
சிறந்த ரசிகை
ஏன் உனக்கு..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.