Saturday, November 17, 2007

காத்திருக்கிறது காவியம்..!



மனதினை பாரம் அழுத்த

கிணற்று நீர் போல்

கண்களில் கண்ணீர்

குடி கொண்டது..!


எதிர்பாராமல் கிடைத்த

உறவு கண்ணிமைக்கும்

நேரத்தில் காணாமல்

போய் விடுமோ என

இதயம் பட படக்க

கண்களில் கண்ணீர்

அருவியாய் கொட்டியது..!


மரங்களில் இருந்து உதிர 

உதிர துளிர்க்கும் 

இலை போன்று - நீ 

விலக விலக உன்னில்

என் அன்பு மென்மேலும்

துளிர்க்கின்றது..!


என் இதயப் புத்தகத்தில்

உணர்வுகளை கவியாக்கி

உதிரத்தை மையாக்கி

நரம்புகளைப் பேனாவாக்கி

உனக்கென நான் வடித்த

காவியம் காத்திருக்கிறது

உன் பார்வைக்காய்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.