மனதினை பாரம் அழுத்த
கிணற்று நீர் போல்
கண்களில் கண்ணீர்
குடி கொண்டது..!
எதிர்பாராமல் கிடைத்த
உறவு கண்ணிமைக்கும்
நேரத்தில் காணாமல்
போய் விடுமோ என
இதயம் பட படக்க
கண்களில் கண்ணீர்
அருவியாய் கொட்டியது..!
மரங்களில் இருந்து உதிர
உதிர துளிர்க்கும்
இலை போன்று - நீ
விலக விலக உன்னில்
என் அன்பு மென்மேலும்
துளிர்க்கின்றது..!
என் இதயப் புத்தகத்தில்
உணர்வுகளை கவியாக்கி
உதிரத்தை மையாக்கி
நரம்புகளைப் பேனாவாக்கி
உனக்கென நான் வடித்த
காவியம் காத்திருக்கிறது
உன் பார்வைக்காய்..!
No comments:
Post a Comment