Thursday, November 1, 2007

காதலுக்கே காதல்

இனியவள்

பூமியின் சுழற்சியில்

சுழன்று கொண்டிருக்கின்றது

காலமும் வாழ்க்கைச் சக்கரமும்

உன் சுழற்ச்சியில் சுழன்று

கொண்டிருக்கிறது எனது வாழ்வின்

அஸ்திவாரம்..!


சூரியனின் உதயத்தில்

தாவரங்களின் ஜீவனம்

உன் உற்சாகத்தில் - என்

வாழ்வின் ஜீவன்..!


மழையை தாங்கும்

பூவிதழ்கள் போல் - உன்

புன்னகையை தாங்குகின்றது

என் புன்னகைகள்..!


இயற்கையில் இருந்து பெரும்

வர்ணங்கள் போல்

உன்னில் இருந்து பெற்ற

இனிமைகளைக் கொண்டு

மாளிகை செய்கின்றேன் - நீ

இனிதாய் வசித்திட..!


கண்ணின் கருமணியாய்

நாளங்களின் துடிப்பாய்

எனக்குள் வீற்றிருக்கின்றாய்

பனித்துளிகளை தாங்கும்

புல் நுனியின்அழகில்

மயங்கிய வேளையில்

என்னை உன் அன்பென்னும்

ஆயுதம் கொண்டு என்னை

மயக்க வந்த 

மாயக் கண்ணனே..!


காற்றின் உருவம் கூட 

தெரிகின்றதே உன்னைக் 

கண்டவுடன் - சூரியன் 

வானத்தில் ஒர் புள்ளியாய்

நீயோ என் வாழ்வின் 

முற்றும் புள்ளியாய்..!


காதலுக்கே காதலைக் 

கொடுக்க - நான் 

ஒன்றும் அறிவிலி 

இல்லையே..,

என் காதலே நீயான போது 

எப்படி என் காதலை 

உன்னிடம்

கொடுக்க முடியும்..!


மெளனமே என்னோடு

உரக்கப் பேச நான்

பேசும் வார்த்தைகள்

அனைத்தும் கரைந்து

சென்றன காற்றோடு - என்

காதலும் அதைப்

போன்றதே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.