பூமியின் சுழற்சியில்
சுழன்று கொண்டிருக்கின்றது
காலமும் வாழ்க்கைச் சக்கரமும்
உன் சுழற்ச்சியில் சுழன்று
கொண்டிருக்கிறது எனது வாழ்வின்
அஸ்திவாரம்..!
சூரியனின் உதயத்தில்
தாவரங்களின் ஜீவனம்
உன் உற்சாகத்தில் - என்
வாழ்வின் ஜீவன்..!
மழையை தாங்கும்
பூவிதழ்கள் போல் - உன்
புன்னகையை தாங்குகின்றது
என் புன்னகைகள்..!
இயற்கையில் இருந்து பெரும்
வர்ணங்கள் போல்
உன்னில் இருந்து பெற்ற
இனிமைகளைக் கொண்டு
மாளிகை செய்கின்றேன் - நீ
இனிதாய் வசித்திட..!
கண்ணின் கருமணியாய்
நாளங்களின் துடிப்பாய்
எனக்குள் வீற்றிருக்கின்றாய்
பனித்துளிகளை தாங்கும்
புல் நுனியின்அழகில்
மயங்கிய வேளையில்
என்னை உன் அன்பென்னும்
ஆயுதம் கொண்டு என்னை
மயக்க வந்த
மாயக் கண்ணனே..!
காற்றின் உருவம் கூட
தெரிகின்றதே உன்னைக்
கண்டவுடன் - சூரியன்
வானத்தில் ஒர் புள்ளியாய்
நீயோ என் வாழ்வின்
முற்றும் புள்ளியாய்..!
காதலுக்கே காதலைக்
கொடுக்க - நான்
ஒன்றும் அறிவிலி
இல்லையே..,
என் காதலே நீயான போது
எப்படி என் காதலை
உன்னிடம்
கொடுக்க முடியும்..!
மெளனமே என்னோடு
உரக்கப் பேச நான்
பேசும் வார்த்தைகள்
அனைத்தும் கரைந்து
சென்றன காற்றோடு - என்
காதலும் அதைப்
போன்றதே..!
No comments:
Post a Comment