கனவுக்குள் நிஜமாய்
வாழ்கின்றாய்
நிஜத்தில் நிழலாகிப்
போகின்றாய்..!
மலர்களின் வாசம் போல்
என்னுள் உன் அன்பை
நிலைநிறுத்தி விட்டு
கானலாய்ப்
போய்விட்டாய்..!
காகஎச்சங்கள் பல
இடங்களில் விதைகளை
விதைத்து செல்வதுபோல்
என்னுள் - உன்
நினைவுகளை
விதைத்துச்
சென்று விட்டாய்...!
முயன்று முயன்று
தோற்றுப் போகின்றேன்
உன்னை மறக்க முடிவிலியாய்
போய்க் கொண்டிருக்கின்றது
நினைவுகளோடு கூடிய
வலிகள்..!
No comments:
Post a Comment