Monday, November 19, 2007

!! முடிவிலி !!

இனியவள்

கனவுக்குள் நிஜமாய்

வாழ்கின்றாய்

நிஜத்தில் நிழலாகிப்

போகின்றாய்..!


மலர்களின் வாசம் போல்

என்னுள் உன் அன்பை

நிலைநிறுத்தி விட்டு

கானலாய்ப் 

போய்விட்டாய்..!


காகஎச்சங்கள் பல 

இடங்களில் விதைகளை 

விதைத்து செல்வதுபோல் 

என்னுள் - உன்

நினைவுகளை 

விதைத்துச்

சென்று விட்டாய்...!


முயன்று முயன்று

தோற்றுப் போகின்றேன்

உன்னை மறக்க முடிவிலியாய்

போய்க் கொண்டிருக்கின்றது

நினைவுகளோடு கூடிய 

வலிகள்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.