Friday, November 23, 2007

உன் தரிசனம்..!




பெண்களுடனேயே படித்து
அவர்களுடனேயே என் 
வாழ்க்கை நகர்ந்த 
வேளையில் - உன் 
தரிசனம் கிடைத்தது..! 

சிறு வயதில் பார்த்த உனை 
மீண்டும் உன் அருகே 
கொண்டு வந்து சேர்த்த 
கடவுள் - உன்மீது 
காதலை வரவைத்து 
கண்ணாமூச்சி விளையாடி 
இறுதியில் உன்னுடன் 
சேர விடாமல் செய்ய 
எதுக்காக உன் வீட்டருகே 
எனை கொண்டு வந்து 
சேர்த்தாரோ..!!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.