Monday, November 19, 2007

காதல் பாதையில்..!

இனியவள்

என் மீது மையல் கொண்ட
பூங்காற்றே இதயம் 
திறந்து உயிர் 
கொண்டு வரைகின்றேன்
ஓர் கடிதம்..!

துயில் கலைந்தாலும்

கலையவில்லையடா 
நேற்றைய இனிய 
மாலைப் பொழுது...!

என்னருகில் நீயிருந்தால்
கரைந்தோடும் நிமிடங்கள்
வருடங்களாய் போகிறதே..!


உன் ஓர் நொடிப் 
புன்னகையில் - என் 
வாழ்க்கைப் பாதையை
காதல் பாதையில் திசை
மாற்றி விட்டாயே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.