Friday, November 23, 2007

தியேட்டர் நினைவு

இனியவள்

நீண்ட நாட்களுக்கு பிறகு
குடும்பத்துடன் படம்
பார்க்கச் சென்றேன்
அங்கே வரவேற்றது
உன் பழைய நினைவுகள்
என்னை......

நீ இல்லையே என்னருகில்
என்று மன அழுகையை
ஒரு புறம் தள்ளிவிட்டு
உள் சென்று நாற்காலியில்
அமர்ந்து கொண்டேன்......

திரையில் படம்
ஓடிக் கொண்டிருந்தது
மற்றவர்கள் சிவாஜி
பார்த்துக் கொண்டிருந்தனர்
நான் மட்டும் நீயும் நானும்
அன்று கண்களால்
பகிர்ந்து கொண்ட அன்றைய
நிகழ்வைக் கண்களில்
கண்ணீருடன் பார்த்து கொண்டிருந்தேன்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.