Wednesday, November 28, 2007

அக்னித் துளிகள்..!!

இனியவள்

நினைக்க நினைக்க
இனித்திடும் கனியல்ல
நினைக்க நினைக்க
கசந்திடும் காதல்
எனது..!

தித்திக்க தித்திக்க
இசைத்திடும் 
இசையல்ல - உன் 
பேச்சு..!

நீயே உலகம் என
நினைத்தேன் அன்பே
உயிரினில் தெளித்திடும்
அக்னித் துளிகள்
அவை..!

நினைவுகளின் நிழல்
எரிமலையென மாறிட
தீயில் விழுந்த மலராய்
கருகிறது என்
இதயமும் - நீ
ஒரு முறையேனும்
திரும்பி பார்க்கமாட்டாயா 
என் அன்பே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.