Saturday, November 17, 2007

!! திறந்து கொண்டது இதயம் !!

இனியவள்


கண் கொண்டு
கவி வடிக்கின்றேன்
உனக்காய் என்றும்..,
என் இதயத்தை 
களவாடி என்னை 
இதயமில்லாதவள்
ஆக்கி விட்டாயே..!

பூட்டியிருந்த இதயவாசல்
திறந்து கொண்டது
உன்னைக் கண்ட
நாள் முதல்..!

காணும் காட்சிகள் 
யாவும் கனவாய் மாற
நிழலாய் இருந்த நீ
நிஜமாய் மாறினாய்
எனக்குள்..!

கடிதம் எழுதுகின்றேன் 
உனக்கு முடிவில்லா 
தொடராய் முடியாமல் 
தொடர்கின்றது..!

உன்னைக் காணா 
நொடிகள் வலித்தாலும் 
உன் நினைவுகள்
வலியைக் கலைந்து
இன்பம் தருகின்றன..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.