Tuesday, November 20, 2007

குறுங்கவிகள்.. !!


சிக்ரெட் எனும்
புல்லாங்குழலில்
மரணமெனும் கீதம்
இசைக்கலாம்...!

....~~~~.....~~~......~~~~.....~~~~......~~~~

தனிமையின் வெறுமையை
மழையின் இன்னிசையில்
கரைக்கின்றது உயிரை
வெளிச்சமாய்
கரைத்துக் 
கொண்டிருக்கும்
உன் நினைவு...!
.....~~~~......~~~~......~~~~.....~~~~


வர்ணப் பூவின் பின்னாலே
வர்ணங்களைத் தொலைத்த
இலைகள் என் காதலைப்
போலவே..!

வர்ணங்களோடு காட்சியளிக்கும்
இப் பூ சிந்துவது மகரந்த மணிகளா
இல்லையேல் இரத்தத் துளிகளா...

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.