Friday, November 16, 2007

காதலின் மாயம்..!



காதல்..காதல்..காதல்
மந்திர வார்த்தைகள் 
கொண்டு மயக்குகின்றதா 
இந்த மூன்றெழுத்து
வார்த்தை....!

காதல் கொண்டேன்
பைத்தியம் ஆனேன்
உன்னைக் கண்டேன்
இதயத்தை இழந்தேன்...!

கண்டுபழகியவை 
எல்லாம் புதிதாய் தோன்ற 
புதியவை எல்லாம்
பழையதாய் தோன்றுகிறது...!

வானத்தில் போட்டி 
போட்டுப் பறக்கின்றேன் 
உன்னை பிடிப்பதற்காய்
கையில் சிக்காத காற்றாய்
பறந்து செல்கின்றாய்...!

உளறும் வார்த்தைகள் 
அனைத்தும் கவிதையாக மாற
கவிதைகள் அனைத்தும்
உளறல்களாக 
மாறுகின்றது..!

நீயின்றி நாட்கள்
முற்றுப் பெற மறுக்கின்றன..

அமாவாசையாய் இருந்த
வாழ்வை பெளர்ணமியாக்கி
கண்சிமிட்டுகின்றாய் மின்னும்
நட்சத்திரமாய்..!

இருட்டைக் கண்டு 
மிரண்டவள் - இன்று
இருட்டை ரசிக்கின்றேன்...
பகலில் உன் நினைவோடும்
இரவில் உன் நிழலோடு 
வாழ்கின்றேன்...!

உன்னோடு கனவில் 
இருக்கும்  நேரங்களில்
சந்தோஷம் கை நீட்டி 
என்னை அரவணைக்க
நீயற்ற தனிமை - 
என்னை 
பயமுறுத்துகின்றது...!

என் காதலை 
கண்டு கொண்டேன் 
உன்னிடம்
உன் காதலை 
கண்டு கொண்டாயா 
ன்னிடம்...!

கேள்விக்குறியுடன் 
ஆரம்பித்த என் 
காதலை முடித்து 
வைப்பாயா முற்றுப்புள்ளி 
வைத்து...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.