Wednesday, November 21, 2007

ஓடோடி வந்திடு..!

இனியவள்

உயிரென நான் 
உனை நினைத்திருக்கையில்
தூசென மிதித்துச்
சென்றதுமேனோ...!

உயிர்ப் பூவென மாறி
என் பாதம் பணிகையில்
கல்லென தூக்கி
எறிந்ததுமேனோ..!

மேகமென கண்கள்
மழையென கண்ணீர்
பொழிகையில் 
சாக்கடையென - முகம் 
சுழித்ததுமேனோ..!

விஷக் கிருமியாய் 
இரத்தமெங்கும் ஓடுதே - உன் 
பிரிவெனும் உயிர்க் கொல்லி நோய்
அன்பெனும் தடுப்பூசி
போட்டென்னை காப்பாற்றிட
ஓடோடி வந்திடு..!

கண்ணை மறைத்திட்ட
காதல் கத்தியென மாறி
உயிரைப் பறித்திட
துடிக்கிறதே அன்பே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.