உயிரென நான்
உனை நினைத்திருக்கையில்
தூசென மிதித்துச்
சென்றதுமேனோ...!
உயிர்ப் பூவென மாறி
என் பாதம் பணிகையில்
கல்லென தூக்கி
எறிந்ததுமேனோ..!
மேகமென கண்கள்
மழையென கண்ணீர்
பொழிகையில்
சாக்கடையென - முகம்
சுழித்ததுமேனோ..!
விஷக் கிருமியாய்
இரத்தமெங்கும் ஓடுதே - உன்
பிரிவெனும் உயிர்க் கொல்லி நோய்
அன்பெனும் தடுப்பூசி
போட்டென்னை காப்பாற்றிட
ஓடோடி வந்திடு..!
கண்ணை மறைத்திட்ட
காதல் கத்தியென மாறி
உயிரைப் பறித்திட
துடிக்கிறதே அன்பே..!
No comments:
Post a Comment