Wednesday, November 21, 2007

!! கனவே கலையாதே.. !!



கண்கள் உள்ள வரை 
காற்றாய் நினைவுகளை 
சுவாசிக்கும் வரை - இதயம் 
துடிக்கும் வரை 
கனவே நீ கலையாதே....! 

காதலில் ஊடல் உள்ள வரை 
மேகத்தோடு துள்ளி விளையாடும் 
தென்றல் உள்ளவரை
நிலவோடு சண்டையிடும்
கனவே நீ கலையாதே..!

வாழ்வில் ஜீவன் உள்ள வரை 
இன்பத்தில் துன்பம் 
ஈழையோடும் வரை 
இதயத்தில் இளமை 
ததும்பும் வரை
மழையோடு கைகோர்த்து - வானவில் 
கோலம் போடும் வரை
கனவே நீ கலையாதே..!

காற்றோடு கதை பேசும் 
பூக்கள் உள்ள வரை 
என்னவனின் நினைவை
சுவாசிக்கும் வரை
கனவே நீ கலையாதே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.