கண்கள் உள்ள வரை
காற்றாய் நினைவுகளை
சுவாசிக்கும் வரை - இதயம்
துடிக்கும் வரை
கனவே நீ கலையாதே....!
காதலில் ஊடல் உள்ள வரை
மேகத்தோடு துள்ளி விளையாடும்
தென்றல் உள்ளவரை
நிலவோடு சண்டையிடும்
கனவே நீ கலையாதே..!
வாழ்வில் ஜீவன் உள்ள வரை
இன்பத்தில் துன்பம்
ஈழையோடும் வரை
இதயத்தில் இளமை
ததும்பும் வரை
மழையோடு கைகோர்த்து - வானவில்
கோலம் போடும் வரை
கனவே நீ கலையாதே..!
காற்றோடு கதை பேசும்
பூக்கள் உள்ள வரை
என்னவனின் நினைவை
சுவாசிக்கும் வரை
கனவே நீ கலையாதே..!
No comments:
Post a Comment