Monday, November 5, 2007

செல்வன் அண்ணா

இனியவள்

தென்றல் காற்றே தென்றல் காற்றே
எம் தமிழ் செல்வனின் இறுதி
மூச்சை சுமந்து வந்த
தென்றல் காற்றே....

எம் புன்னகைச் செல்வனின்
இறுதியாய் நினைத்திட்ட
நினைவுகளை அறிந்து வந்தாயோ..

மூச்சுக் காற்றே மூச்சுக் காற்றே
மண்ணை சுவாசமாய்
சுவாசித்தவனை விட்டுப்
பிரிந்தாயே....

செல்வா செல்வா எங்கள்
தமிழ்ச் செல்வா - எங்கள்
தலைவர் வழி நடந்தாயே
இன்று தலைவரை விட்டு
எங்கு சென்றாயோ....

தேசக் காற்றெங்கும் உன்னைத்
தேடித் தேடி திரிகின்றனவே
பறவைகள் அனைத்தும் - காற்றாய்
கலந்து போனாயே....

அண்ணா அண்ணா செல்வா அண்ணா
விதையாகிய உன் உயிர்
விருட்சமாய் மாறிடுமே.....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.