Friday, November 16, 2007

அன்புத் தோழி..!



உன் கண்ணீர் துடைத்திட
என் கரங்கள் இல்லை
உன்னருகில்..!

உன் இதயத்தின் சோகங்கள்
நீக்கி தோளோடு தோள்
கொடுக்க நான் இல்லை
உன்னருகில்..!

உன் கண்களில் கரைந்தோடும்
கண்ணீரில் கரைகின்றது
என் நிமிடங்கள்..!

தோழியே உன்னருகில்
நான் இல்லை என்னருகில்
நீ இல்லை..!

என் அன்பென்றும் உன்னையே
சுற்றி வட்டமிடும் பூமியைச்
சுற்றும் நிலவாய்...

என் மனக்கண் உன்னையே
நோக்கும் என்றென்றும்...
உன் மனம் தாங்கும் 
சோகங்கள் - என் 
இதயத்தைச் சேரட்டும்
உன் சோகங்கள் 
கரையட்டும்...!

தண்டை நீங்கி 
வாழாத மலராய் - நம் நட்பின்றி 
வாழாது என்
இதயம்..!

உருண்டோடும் உலகத்தில்
ஓவ்வொரு உயிர்களிலும்
துளிர்விடும் அன்பின் மேல்
ஆணையாய் உன் மீது நான்
கொண்ட அன்பு என்னுடல்
கல்லறை சென்றாலும் மாறாது
என்னுயிர் தோழியே..!

உன் சோகங்கள் கலைந்திடு
நாளை விடிந்திடும் விடியலில்
பறவைகள் சந்தோஷ 
கானம் பாடிட
மலர்களைனைத்து 
பூமாலை தொடுத்திட
இதமாய் வீசிடும் தென்றலில்
துன்பங்கள் பறந்திட 
உன் வாழ்வில்
இன்பங்கள் புத்துயிர் 
பெறட்டும்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.