Wednesday, November 21, 2007

கண்கொண்டு பார்க்க மாட்டாயா..!

இனியவள்

என்னிதயம் துடிக்கிறதே
ஓடோடி வா அன்பே...,
காட்டாறாய் கண்களிரண்டும்
கண்ணீர் வடிக்கின்றதே
உன் அன்பெனும் 
அணைகொண்டு அணைக்க 
மாட்டாயோ..!

உயிருக்கு தீ மூட்டி
துடிக்கின்றேன் - நீராய்
அணைத்திட 
வாராயோ..!

நிலவு கூட சுடுகிறதே
பேதையிவள் 
முகத்தை பார்த்து
உன் பூமுகம் கொண்டு
நிலவை குளிர்விக்க
ஓடோடி வந்து விடு..!

இறைவனிடம் 
வேண்டிக் கொள்வதே
என் உயிர் காற்று - உன் மடியில் 
போவதற்கே..,
அதற்கேனும் ஒருமுறையாவது
எனைக் கண்கொண்டு
பார்க்க மாட்டாயா..!
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.