என்னிதயம் துடிக்கிறதே
ஓடோடி வா அன்பே...,
காட்டாறாய் கண்களிரண்டும்
கண்ணீர் வடிக்கின்றதே
உன் அன்பெனும்
அணைகொண்டு அணைக்க
மாட்டாயோ..!
உயிருக்கு தீ மூட்டி
துடிக்கின்றேன் - நீராய்
அணைத்திட
வாராயோ..!
நிலவு கூட சுடுகிறதே
பேதையிவள்
முகத்தை பார்த்து
உன் பூமுகம் கொண்டு
நிலவை குளிர்விக்க
ஓடோடி வந்து விடு..!
இறைவனிடம்
வேண்டிக் கொள்வதே
என் உயிர் காற்று - உன் மடியில்
போவதற்கே..,
அதற்கேனும் ஒருமுறையாவது
எனைக் கண்கொண்டு
பார்க்க மாட்டாயா..!
1 comment:
Nice one abt love
Post a Comment