Wednesday, November 21, 2007

** ஏனோ....!! **

இனியவள்

மழைச்சாரலின் தூறலில்
மயிலிரகாய் வருடிச்செல்லும்
உன் நினைவுகள்
காலங்கள் கடந்த போதிலும்
வசந்த காலப் பறவையாய்
என்னைச் சுற்றியே
வட்டமிடுவதுமேனோ...!

செக்கச் சிவந்த செவ்வானத்தில்
தங்கமென ஜொலித்திடும்
கடற்கரையோரத்திலே
இருகரம் கோர்த்து 
நாம் நடக்கையில்
அலைகடல்கள் பின்னோக்கி
ஓடியதுமேனோ
கனவு தானே
என்று தானே..!

வெண்பஞ்சு தேகம் கொண்ட
முயல் குட்டிகள் துள்ளி
ஓடுகையில் உன் 
கண்களிரண்டும் - என்
கண்களோடு சில்மிஷம்
செய்ததேனோ...!

உன் மூச்சுக் காற்று - என்
மூச்சுக்காற்றோடு கலக்கையில்
என்னுள் உன்னிதயம்
படபடத்ததுமேனோ..!

நீ என்னோடு பேசுகையில்
மலர்களனைத்தும் நாணத்தில்
தலை சாய்ந்து
மெளன பாஷையில்
சஞ்சரிப்பதுமேனோ..!

என் விரலோடு உன் விரல்கள்
செல்லச் சண்டை பிடிக்கையில்
மேகங்கள் ஓன்றோடு ஒன்றுரசி
பன்னீர் தெளிப்பதுமேனோ..!

இது கனவு தான்
நிஞமல்ல - என 
நீயும் என்னை 
காயப்படுத்துகிறாயோ..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.