Wednesday, November 14, 2007

சென்றுவிட்டாய்

இனியவள்

மாலையில் விழுந்தாலும்
சூரியன் மரித்துப் 
போவதில்லை..,
நிலவுக்கு ஒளியூட்டி
தன்னை உயிர்ப்பித்துக்
கொள்வது போல் 
உன்னை காணாமல்
பிரிந்து சென்றாலும் - உன்
நினைவுகள் என்னை
உயிர்ப்பிக்கின்றதே...!

கடல் நீர் கலந்து உருப்பெறும்
மேகங்கள் உப்பு நீர்
கொடுக்காதது போல்..,
உன் பிரிவால் உருவான
நினைவுகள் 
வலியைத் தருவதற்கு
பதிலாக 
இன்பத்தையல்லவா
தருகின்றது..!

ஒட்சிசனாய் இனிமையான உன்
நினைவுகளை உட்செலுத்தி
பிரிவு தந்த வலிகளை 
காபனீரொட்சைட்டாய்
வெளிவிடுகின்றேன்..!

உடலை மட்டும்
என்னிடம் விட்டுவிட்டு 
உயிரைக் களவாடி சென்று 
நினைவுகளைப் பரிசளித்து
நிழலாய் இருந்த உன்னை 
ஞாபங்கள் கொண்டு 
நிஜமாக்கிச் சென்று விட்டாய்...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.