மாலையில் விழுந்தாலும்
சூரியன் மரித்துப்
போவதில்லை..,
நிலவுக்கு ஒளியூட்டி
தன்னை உயிர்ப்பித்துக்
கொள்வது போல்
நிலவுக்கு ஒளியூட்டி
தன்னை உயிர்ப்பித்துக்
கொள்வது போல்
உன்னை காணாமல்
பிரிந்து சென்றாலும் - உன்
நினைவுகள் என்னை
உயிர்ப்பிக்கின்றதே...!
கடல் நீர் கலந்து உருப்பெறும்
மேகங்கள் உப்பு நீர்
கொடுக்காதது போல்..,
உன் பிரிவால் உருவான
நினைவுகள்
பிரிந்து சென்றாலும் - உன்
நினைவுகள் என்னை
உயிர்ப்பிக்கின்றதே...!
கடல் நீர் கலந்து உருப்பெறும்
மேகங்கள் உப்பு நீர்
கொடுக்காதது போல்..,
உன் பிரிவால் உருவான
நினைவுகள்
வலியைத் தருவதற்கு
பதிலாக
பதிலாக
இன்பத்தையல்லவா
தருகின்றது..!
ஒட்சிசனாய் இனிமையான உன்
நினைவுகளை உட்செலுத்தி
பிரிவு தந்த வலிகளை
தருகின்றது..!
ஒட்சிசனாய் இனிமையான உன்
நினைவுகளை உட்செலுத்தி
பிரிவு தந்த வலிகளை
காபனீரொட்சைட்டாய்
வெளிவிடுகின்றேன்..!
உடலை மட்டும்
வெளிவிடுகின்றேன்..!
உடலை மட்டும்
என்னிடம் விட்டுவிட்டு
உயிரைக் களவாடி சென்று
நினைவுகளைப் பரிசளித்து
நிழலாய் இருந்த உன்னை
நிழலாய் இருந்த உன்னை
ஞாபங்கள் கொண்டு
நிஜமாக்கிச் சென்று விட்டாய்...!
No comments:
Post a Comment